ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள்
ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.
ஆம்பூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பை சனிக்கிழமை காலை பொதுமக்கள் பிடித்தனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்புக்கு அருகிலிருந்த நிலத்தில் மலைப்பாம்பு இருந்துள்ளது. சனிக்கிழமை காலையில் அவ்வழியாக சென்ற அவ்வூர் மக்கள் பார்த்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் போராடி 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து கோணிப்பைக்குள் அடைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
தகவல் அளித்து 2 மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினர் அதனை கொண்டு சென்று அருகிலிருந்த காட்டில் விட்டனர்.