முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் விடுதலை

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 3-ம் தேதி இலங்கைக் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:47 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 3-ம் தேதி இலங்கைக் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அவர்கள் 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறினார். மேலும், அவர்கள் 16 பேரும் இன்று இரவு அல்லது நாளை பகல் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்படுவர்;

நாளை இரவுக்குள் அவர்கள் கரை திரும்புவர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.