முகப்பு
தற்போதைய செய்திகள்

மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் சாவு

 சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

 சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

சிதம்பரம் அருகே வத்தவராயன்தெத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (30). சவுதியில் லேபராக பணியாற்றும் இவர் கடந்த 15 தினங்கள் முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு வத்தவராயன்தெத்து கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது வண்டுராயன்பட்டு எனுமிடத்தில் மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே செல்வம் இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.