சிதம்பரத்தில் ரயில் மறியல்: 15 பேர் கைது
சிதம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபட்சவை போர்க் குற்றவாளி என அறிவிக்கவும், ஐ.நா.,வில் இலங்கையின் இன அழிப்பு குறித்து அறிவிக்கவும் கோரி நாம் தமிழர் கட்சியினர் திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 5 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது.