தடையை மீறி மீன்பிடித்த குமரி மீனவர்கள் தூத்துக்குடியில் சிறைப்பிடிப்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் தடையை மீறி குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்ததால், தூத்துக்குடி மீனவர்கள் அவர்களைச் சிறைப்பிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் தடையை மீறி குமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்ததால், தூத்துக்குடி மீனவர்கள் அவர்களைச் சிறைப்பிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை உள்ளது. இந்தத் தடையை மீறி, 4 விசைப்படகுகளில் 47 பேர் மீன்பிடித்துள்ளனர். அவர்களைச் சிறைப்பிடித்து அழைத்து வந்த தூத்துக்குடி மீனவர்கள், அவர்களை தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.