சிதம்பரத்தில் ரயில் மறியல்: 16 பேர் கைது
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபட்ச, சிங்களக் கொடி ஆகிவற்றைக் கைகளில் ஏந்தி வந்த அவர்கள், திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிப்பதற்காக வந்தனர். ஆனால் அவர்களை ரயில் நிலைய வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவலர்கள், மாணவர் நீதிவள்ளல் தலைமையில் வந்த 16 மானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்.