ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: வைகோ உட்பட 200 பேர் கைது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையிலான மதிமுகவினர் சுமார் 200 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையிலான மதிமுகவினர் சுமார் 200 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இரு தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் பலர் பாதிக்கப்பட்டனர் என்று கூறி, அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.