தூத்துக்குடியில் சாலைமறியல்: தேமுதிகவினர் கைது
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் நேற்று அவையில் இருந்து ஒரு வருட காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் நேற்று அவையில் இருந்து ஒரு வருட காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்டச் செயலர் சண்முகராஜன் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.