தற்போதைய செய்திகள்

கமுதி அருகே பைக் மீது பைக் மோதல்: திமுக பிரமுகர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தாதகுளத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் சைவதுரை(48). இவர் நீண்ட் காலமாக கமுதி அருகே அபிராமத்தில் தங்கி கரிமூட்டம் போடும் தொழில்

தினமணி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தாதகுளத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் சைவதுரை(48). இவர் நீண்ட் காலமாக கமுதி அருகே அபிராமத்தில் தங்கி கரிமூட்டம் போடும் தொழில் மற்றும் காண்ட்ராக்ட தொழில் செய்து வந்தார். இவர் மாவட்ட திமுக பிரதிநிதி ஆவார். இன்று பகலில் அபிராமத்திலிருந்து கமுதிக்கு தனது பைக்கில் சென்றார். அப்போது கமுதி அருகே கிளாமரத்துப்ப்பட்டியில் ஒர்க்‌ஷாப் கடை வைத்துள்ள தமிழரசன் என்பவர் தனக்கு வேண்டிய இடைச்சூரணியைச் சேர்ந்த காத்தனன் என்பவரை தனது பைக்கில் ஏற்றி கொண்டு அபிராமம் நோக்கி சென்றார். தமிழரசன் சொந்த ஊர் அபிராமம் அருகே உள்ள வடக்கூர் ஆகும்.

இந்த நிலையில் பசும்பொன் காலனி அருகே வந்துகொண்டிருந்த சைவதுரை பைக் மீது தமிழரசன் ஓட்டி சென்ற பைக் பயங்கரமாக மோதியதாம். இதில் இரு பைக்குகள் நொருங்கியது. இந்த விபத்தில் சைவதுரை தமிழரசன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இருவருக்கும் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து,பின் 108 ஆம்புலன்ஸ் மூலம்  மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சைவதுரை உயிரிழந்தார்.தமிழரசன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.லேசான காயம் அடைந்த காத்தனன் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழரசன் பைக்கில் சென்றபோது செல்போன் பேசியபடியே சென்றதுதான் விபத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.விபத்து குறித்து கமுதி காவல் ஆய்வாளர் ஆனந்தன் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT