முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 3 மே, 2013 at 1:56 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:05 PM

விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமதாஸ் மீது விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ் சார்பில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், இந்த வழக்கின் விசாரணைக்கு காவல் துறை தரப்பில் விசாரணை அதிகாரி ராமநாதன் ஆஜராகவில்லை. அவர் முக்கிய வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் பதில்மனு தாக்கல் செய்ய அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆயினும் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர். ஆனால் நீதிபதி கால அவகாசம் தரவில்லை. 

Advertisement

இதனால் ராமதாஸ், ஜி.கேமணி, எம்.எல்.ஏ கணேஷ் குமார் உள்பட பாமகவினர் 463 பேருக்கு ஒரு நபர்  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

விழுப்புரத்தில் போடப்பட்ட வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பெற்றிருப்பதால், தற்போதைக்கு ராமதாஸ் சிறையிலிருந்து வெளி வரஇயலாது என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.