முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. அருகே ஹோட்டலில் தகராறு: ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹோட்டலில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 மே, 2013 at 1:01 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹோட்டலில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியில் ரா.நிறைபாண்டியன் (65) என்பவர் ஹோட்டல் வைத்துள்ளார். இங்கு வந்த டி.மானகசேரி, நடுத்தெருவைச் சேர்ந்த ச.முத்துராஜ் (27) என்பவர், கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிறைபாண்டியனிடம், ஆபாசமாகப் பேசி, யாரைக்கேட்டு ஹோட்டலை திறந்தாய்? உடனே மூடு என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் நிறைபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப் பதிவு செய்து முத்துராஜைக் கைது செய்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.