ராமதாஸ் விடுதலை கோரி புவனகிரி, கீரப்பாளையத்தில் கடைஅடைப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் பாமகவினரின் அழைப்பு விடுத்ததை அடுத்து வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. கடையடைப்பை முன்னிட்டு புவனகிரி, கீரப்பாளையத்தில் அனைத்து கடைகளும், ஹோட்டல்களும் அடைக்கப் பட்டிருந்தன.சிதம்பரம் அருகே சிவபுரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.