முகப்பு
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து ரூ.60 ஆயிரம் மதிப்பு வெள்ளி, தங்க நகைகள் திருட்டு

சிதம்பரம் அருகே மீதிகுடியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:42 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மீதிகுடியில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி, தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி ஜே.எம்.ஜே நகரைச் சேர்ந்த யுவராஜா (32). இவர் கடந்த மே 5-ம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார். மீண்டும் மே 9-ம் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த மூன்றேகால் பவுன் செயின் மற்றும் மோதிரம் மற்றும் 60 கிராம் மதிப்பிலான வெள்ளி விளக்குகளையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.