மண்டபம் - ராமேசுவரம் இடையேபயணிகள் ரயில் 3 நாள்களுக்கு ரத்து
பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829), ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830) ஆகியவற்றின் போக்குவரத்து மண்டபம் - ராமேசுவரம் இடையே மே 14 முதல் மே 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.