என் மீதான புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்
என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். இது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். இது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் கூமாபட்டியைச் சேர்ந்த போஸ் என்பவர் என் மீது புகார் அளித்து வருகிறார். என்னைக் களங்கப்படுத்தும் விதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியின் மாஃபியா கும்பல் இருப்பதாக அறிகிறேன். இதற்குக் காரணம் யார் என்பதை அறிய, என் மீதான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட எஸ்பி மகேஷ் குமார், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்துள்ளேன்.. என்றார். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.