முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில்,

தற்போதைய செய்திகள்

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:44 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர்கள் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர், கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு புலன் விசாரணைக்கு உதவியாக சமத்துவபுரம் சென்றுள்ளனர். சமத்துவபுரம்-செம்பட்டையன்கால் ரோட்டில், சின்னக்கருப்பசாமி வீடு அருகே போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சமத்துவபுரம், ராமசாமி மகன் சுந்தர் (38) என்பவர் போலீஸாரிடம் ஆபாசமாகப் பேசி, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து முதல்நிலைக் காவலர் கதிரேசன் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →