மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காரைக்காலில் கடையடைப்பு
கடந்த மாதம் 5ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரை உடனே விடுவிக்க
கடந்த மாதம் 5ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரை உடனே விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று காரைக்காலில் வணிகர்கள், வணிகர் சங்கங்கள் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இன்று காலை 7 மணி முதலே அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.