காங்கிரஸ் பிரமுகர் மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்
தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.ஐ.மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.ஐ.மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சிதம்பரம் ஏஎஸ்பியிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் மாநில நிர்வாகிகள் சு.திருமாறன், அ.கலியபெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பி.குறிஞ்சிவளவன், பால.அறவாழி, பெரு.திருவரசு, க.அரசு, மு.வெற்றிவேந்தன், பெரு.சரித்திரன், ராஜி, சமத்துவளவன், அண்ணாதுரை, ஜான், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்று மனு அளித்தனர்.
மனுவிபரம்:
மே.19-ம் தேதி சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கே.ஐ.மணிரத்தினம் எங்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். மேலும் கலவரக்காரர், கட்டப் பஞ்சாயத்துக்காரர் என இழிவு படுத்தி பேசியும், இவருக்கு ஆண்டவன் கூலி கொடுப்பான் என உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனவே இப்புகார் மீது உரியபிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வ.க.செல்லப்பன் தெரிவித்துள்ளார்.