மதுரை நகர சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோஹன் ராஜேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முன்னர் பணிபுரிந்துள்ளார்.
இன்று காலை பொறுப்பேற்றதும் மதுரை அன்னை மீனாட்சியின் அருளால் தம் பணியை திறம்படச் செய்ய முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னர் இதே பொறுப்பில் இருந்த திருநாவுக்கரசு திருப்பூர் மாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டதை அடுத்து ரோஹன் ராஜேந்திரா மதுரை நகருக்கு பொறுப்பேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.