முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதல் : போலீஸ் டிரைவர் சாவு

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் டிரைவர் சாவு.  மற்றொரு போலீஸ் காயம்.

Updated On : 30 மே, 2013 at 10:56 PM
பகிர்:

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் டிரைவர் சாவு.  மற்றொரு போலீஸ் காயம்.

ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணிபுரிபவர் சேகர் (53).  அதே காவல் நிலையத்தில் இருசக்கர ரோந்து வாகன போலீஸாராக பணிபுரிபவர் பிரபாகரன் (35).  இருவரும் பணி நிமித்தமாக மாதனூர் நோக்கி சென்றுள்ளனர். பிரபாகரன் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.  தோட்டாளம் கிராமத்தருகே சென்றபோது தனியார் பார்சல் சர்வீஸ் வேன் அவர்கள் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற சேகர் பலத்த காயத்துடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  பிரபாகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.