சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் சிக்கி ஒருவர் பலி
சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்பட்டக்காரர் ஒருவர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் நகரில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்பட்டக்காரர் ஒருவர் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (30). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஸ்டுடியோவில் புகைப்படக்காரராக பணிபுரிகிறார். வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த இவர் நிலைதடுமாறி, சிதம்பரம் வடக்கு ரத வீதி தலைமை தபால் நிலையம் எதிரில் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement