சிதம்பரத்தில் பதற்றமான பகுதிகளில் அதிவிரைவுப்படை போலீஸார் ஆய்வு
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அதிவிரைவுப்படை செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பதற்றமான பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அதிவிரைவுப்படை செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.
கோவையிலிருந்து துணை கமாண்டர் எஸ்.எஸ்.தேவ் (உத்ரகாண்ட்), உதவி கமாண்டர் ஷாஜி அந்தோணி (கேரளா) ஆகியோர் தலைமையில் 72 பேர் கொண்ட அதிவிரைவுப்படையினர் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளை சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளனர். இவர்கள் நவ.8-ம் தேதி வரை கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி நவ.8-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.