வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலி
மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.