கடலூர்-கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூர்- கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு நெய்வேலியைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் கோரிக்கை
சபரிமலை சீசனை முன்னிட்டு கடலூர்- கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு நெய்வேலியைச் சேர்ந்த சமூகசேவகர் எஸ்.சகாதேவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதம்: சபரிமலை சீசன், கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் பல்வேறு தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவதை வரவேற்கிறோம். அதே போன்று கடலூர், குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
குறிப்பாக சபரிமலை சீசன் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடலூரிலிருந்து கோயம்புத்தூருக்கு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், சேலம் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். அதேபோன்று கடலூரிலிருந்து சென்னைக்கு குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக ரயில்கள் விட வேண்டும் என சமூகசேவகர் எஸ்.சகாதேவன் தெரிவித்துள்ளார்.