தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பி மீது பைக் மோதல்: வாலிபர் சாவு
ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17). இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார். விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக்
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் சுண்ணாம்புகாளவாய் பகுதியை சேர்ந்தவர் ரபீக் மகன் காதர் (17). இவர் பைக்கில் வாணியம்பாடிக்கு சென்றார். விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பைக் நிலைத்தடுமாறி தடுப்பு கம்பி மீது மோதியதில் படுகாயமடைந்தார். ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.