அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடும் என மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடும் என மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 அமைச்சர்கள் வன்னியர்களுக்கு வழங்கியுள்ளீர்கள். அதேபோல் தரும்புரி, சேலம், நாகை, அரியலூர் மாவட்டங்களில் அதிமுக அரசில் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும். வரும் காலத்தில் வன்னியர் சொத்துக்கள் நலவாரியம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை கையக்கப்படுத்திட சட்டம் இயற்றிட வேண்டும் என எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.