முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் முழுஅடைப்பு: பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து வணிகர் சங்கங்களின் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து வணிகர் சங்கங்களின் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

சிதம்பரம் நகரில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக காசுக்கடைத்தெரு, மேலவீதி ஆகிய பகுதிகளில் அனைத்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் கடைஅடைப்பிற்கு சிறுதொழில் முனைவோர் அமைப்பு ஆதரவு அளித்ததை முன்னிட்டு சிறுதொழில் முனைவோர் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர். முழுஅடைப்பு போராட்டத்தை முன்னிட்டு நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

கடைகளை அடைக்க கோரிய மதிமுகவினர் கைது: சிதம்பரத்தில் நகரமன்ற உறுப்பினர் எல்,சீனுவாசன் தலைமையில் மதிமுகவினர் 10 பேர் கடைகளை அடைக்கச் சொல்லி ஊர்வலமாக சென்றனர். அப்போது தெற்குரதவீதியில் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் அவர்களை மறித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement

சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments