நெல்லையில் பாமக, இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சியினர் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன்பாக பாமக மாநகர் மாவட்டச் செயலர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் வியனரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை மார்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் துரை, ராஜ்குமார், மனுவேல் ஆகியோரது தலைமையில், மாநகர் மாவட்டச் செயலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.