சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் லட்சதீபம்!
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை நடராஜர் கோயில் கிழக்கு வாயிலில் 21 படிகளுக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் அழகிய கலைவண்ணத்தில் பூக்களால் மிகப்பெரிய சிவலிங்கத்தை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்களால் புதன்கிழமை லட்சதீபம் ஏற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் புதன்கிழமை நடராஜர் கோயில் கிழக்கு வாயிலில் 21 படிகளுக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் அழகிய கலைவண்ணத்தில் பூக்களால் மிகப்பெரிய சிவலிங்கத்தை வரைந்து, அதன் விளிம்புகளில் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பஞ்சபூத ஸ்தலங்களில் லட்சதீபம் ஏற்றி வரும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர்கள் குழுவினர் 5வது ஸ்தலமாக சிதம்பரத்தில் புதன்கிழமை லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். பஞ்சபூத ஸ்தலங்களான காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில் லட்சதீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர் இக்குழுவினர்.