முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு ரூ.3.5 கோடியில் பவழமாலைகள் : பக்தர் அன்பளிப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க ரூபாய் மூன்றரை கோடி மதிப்பில், 20 சவரனில் செய்யப்பட்ட இரு பவழமாலைகளை பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க ரூபாய் மூன்றரை கோடி மதிப்பில், 20 சவரனில் செய்யப்பட்ட இரு பவழமாலைகளை பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

சிதம்பரம் சாஹரி அம்மாள் - விஸ்வநாத ஐயர் நினைவாக அவது குடும்பத்தினர் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமானுக்கு அணிவிக்க ரூபாய் மூன்றரை கோடி மதிப்பிலான இரு பவழ மாலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மாலையில் உள்ள பவழமணியின் எடை 961 கிராம், 600 மில்லியாகும். விலை உயர்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரகமாகும் இந்த பவழமணி. இந்த பவழ மணிகளை கொண்டு 20 சவரனில் இரு பவழமாலைகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பவழ மாலைகளை விஸ்வநாத ஐயர் குடும்பத்தாரின் கட்டளை தீட்சிதரும், ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா செயலாளருமான ஸ்ரீஐயப்ப தீட்சிதர், கோயில் பொதுதீட்சிதர்களின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பட்டுதீட்சிதர், சோமாஸ்கந்தர் தீட்சிதர் ஆகியோரிடம் வழங்கினார். மேலும் இந்த பவழ மாலைகளை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவில் தேர் மற்றும் தரிசனத்தின் போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது என ஸ்ரீஐயப்பதீட்சிதர் தெரிவித்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments