முகப்பு
தற்போதைய செய்திகள்

களக்காடு, முண்டன்துறை காப்பகத்தில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க அகழி

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் ரூ. 1.24 கோடி மதிப்பில் 32 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்கப்படுகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் ரூ. 1.24 கோடி மதிப்பில் 32 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்கப்படுகிறது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் களக்காடு, பாபநாசம், கடையம் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விளை நிலங்களை பெருமளவில் சேதமடைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

கடையநல்லூர், புளியங்குடி வனப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் அடவிநயினார் அணையில் இருந்து கடையநல்லூர் வரை அகழி அமைக்கப்பட்டது. மேலும் ரூ. 1.50 கோடி மதிப்பில் தற்போது கடையநல்லூரில் இருந்து சங்கரன்கோவில் வரை 50 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அட்டகாசம் செய்வது தடுக்கும் வகையில் களக்காடு சரகத்தில் 18 கி.மீ தொலைவுக்கு ரூ. 81.72 லட்சம் மதிப்பில் அகழி அமைக்கப்படுகிறது. இதேபோல் முண்டன்துறை சரகத்தில் பாபநாசம், கடையம் வனப்பகுதியில் 11 கி.மீ தொலைவுக்கு

ரூ. 41.78 லட்சம் மதிப்பில் அகழி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் 32 கி.மீ தொலைவுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →