கால்வாயில் விழுந்த 5 வயது சிறுவன் சாவு
சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவா(5). இதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே கால்வாயில் விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தான்.
சங்கராபுரம் அடுத்துள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவா(5). இதேப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.
வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று மாலை வீட்டுக்கு வந்த சிறுவன், தெருவில் நின்ற மாடு ஒன்று சீறியதால் பயந்த கால்வாயில் விழுந்தான்.
இதனால் காயமடைந்த சிறுவன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தான்.
இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.