சாலையைக் கடந்த பார்வைத்திறன் குறைந்த தொழிலாளர்கள் இருவர் வேன் மோதி பலி
கரூர் அருகே பார்வைக் குறைபாடுள்ள தொழிலாளர்கள் இருவர் சாலையைக் கடக்கும்போது வேன் மோதி பலியாயினர்.
கரூர் அருகே பார்வைக் குறைபாடுள்ள தொழிலாளர்கள் இருவர் சாலையைக் கடக்கும்போது வேன் மோதி பலியாயினர்.
நாமக்கல்லைச் சேர்ந்த்வர் தேவராஜ்(29). மூர்த்திப் பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(28). இருவரும் மூர்த்திப் பாளையத்தில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை செய்து வருகின்றனர். நேற்றுஇரவு அவர்கள் சாலையைக் கடந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி காதிகிராப்ட் பொருள்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியது.இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.