பொறையாரில் நூதன முறையில் பணம் திருட்டு
நாகை மாவட்டம் பொறையாறு சந்தைவெளித் தெருவில் சிறிய அளவில் மளிகை மற்றும் காய்கனி கடை வைத்திருப்பவர் முஹம்மது இஸ்மாயில்.இவர் சனிக்கிழமை காலை தனது கடையில் இருந்தபோது
நாகை மாவட்டம் பொறையாறு சந்தைவெளித் தெருவில் சிறிய அளவில் மளிகை மற்றும் காய்கனி கடை வைத்திருப்பவர் முஹம்மது இஸ்மாயில்.இவர் சனிக்கிழமை காலை தனது கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார்.சாலையில் ஒரு செருப்பு கிடக்கிறது அது உங்களுடையாதா என்று பாருங்கள் என முஹம்மது இஸ்மாயிலிடம் கூறியுள்ளார்.இஸ்மாயில் கடையிலிருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.
அப்போது அந்த நபர் கடையினுள் மேஜையில் வைக்கப்படிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாராம்.பையினுள் ரூ.45 ஆயிரம் பணம் இருந்துள்ளது.இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.