அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நீதிவள்ளல் தலைமையில் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ராஜேந்திரன் சிலை அருகே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறியில் புலத்தில் முதல்வர் படத்தை பொருத்தி, வெடி, வெடித்து ஊழியர் சங்கத்தினர் கொண்டாட்டம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு முழுக்கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தலைவர் சி.மதியழகன் தலைமையில் பொறியியல் புலத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை பொருத்தி, வெடி, வெடித்து கொண்டாடினர்.