நாகை துறைமுக அலுவகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
நாகை துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 1,520 கீ.மீ தொலைவில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதையொட்டி,நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல்
நாகை துறைமுக அலுவலகத்தில் தூர முன்னறிவிப்பாக1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
நாகை துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே 1,520 கீ.மீ தொலைவில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதையொட்டி,நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
புயல் உருவாகக் கூடிய திடீர்க் காற்றுடன் கூடிய மழை பெய்யும் வானிலைப்பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை உள்ளிட்ட சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமைகாலை நேரத்தில் லேசான மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிற்பகல் நேரத்தில் லேசான மழை பெய்தது. மற்ற நேரங்களில் குறிப்பிடத்தக்க வானிலை மாற்றம் ஏதும் இல்லை.