முகப்பு
தற்போதைய செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் உடல்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விழுப்பந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார் (38). இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இவர் புதன்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி போடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments