விஷப் பாம்பு கடித்து மூதாட்டி சாவு
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது
கடவூர் அருகே விஷப் பாம்பு கடித்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்தது. உடனே அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.