சிதம்பரம் அருகே தூக்கு மாட்டிய நிலையில் இளைஞர் சடலம்
சிதம்பரம் அருகே மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சிதம்பரம் அருகே மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம் பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் கருணாகரன் (28). சொந்த ஊரில் எதிர்வீட்டில் உள்ளவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டதால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே உள்ள என்.பூலாமேடு கிராமத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்கி கம்பி பிட்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சமீபத்தில் பூதம்பாடி கிராமத்திற்கு சென்று பூலாமேட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பூலாமேடு கிராமத்தில் மாந்தோப்பில் உள்ள மாமரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் அன்பழகன் வியாழக்கிழமை இறந்து கிடந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.