மனோன்மணியம் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் வீட்டில் திருட்டு
நெல்லை பெருமாள்புரம் செயின்மேரீஸ் தெருவில் வசிப்பவர் சுந்தர் சிங்(75). இவர் மனோன்மணியம் பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னையில்
நெல்லை பெருமாள்புரம் செயின்மேரீஸ் தெருவில் வசிப்பவர் சுந்தர் சிங்(75). இவர் மனோன்மணியம் பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னையில் பணியாற்றுவதால்,மகளுடனேயே தங்கியுள்ளார்.மகனை பார்க்க தனது மகளுடன் சென்னை கிளம்பிய சுந்தர் சிங் சாவியை வீட்டில் பணிபுரியும் புஷ்பாவிடம் கொடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீட்டிற்கு சென்று பார்த்த புஷ்பா, வீட்டின் கதவு உடைக்கப்படிருப்பதை கண்டார்.இது குறித்து புஷ்பா போலீஸில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளருக்கு தகவல் தரப்பட்டது