புதுச்சேரியில் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் தீ விபத்து
புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மூன்று அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் இயங்கி வருகிறது.
இங்கு வங்கி, காப்பீடு நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.