ரேபரலிக்கு பிரியங்கா காந்தி திடீர் விஜயம்
காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில்
காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில் உள்ள பாகோ, துரை,சகுனி, ஹர்தி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும் பிரியங்காக காந்தி அந்த பகுதிகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசித்தாக கூறப்படுகிறது..
இந்நிலையில் பிரியங்கா காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது அம்மா சோனியாவுடன் துரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.