குத்தாலம் அருகே கணவன் மனைவி வெட்டிக் கொலை: வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை காரணம்?
நாகை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் கம்பர் தெருவில் வசித்தவர் மணி என்பவரின் மகன் சிவகுமார்(28). இவரது மனைவி ரேகா (21).
நாகை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரம் கம்பர் தெருவில் வசித்தவர் மணி என்பவரின் மகன் சிவகுமார்(28). இவரது மனைவி ரேகா (21).
சிவகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்தார். கடந்த 3 மாதங்களாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர், இங்கே வட்டிக்கு பணம் தரும் தொழிலைச் செய்து வந்தார்.
இந்திலையில் செவ்வாய்க் கிழமை இன்று அதிகாலை 3 மணி அளவில் சிவகுமார் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், சிவகுமார், அவரது மனைவி ரேகா இருவரையும் அரிவாளால் வெட்டியது. இதில், இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீஸார், உடல்களைக் கைப்பற்றி, கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வட்டித் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.