முகப்பு
தற்போதைய செய்திகள்

தரங்கம்பாடி அருகே தந்தையை கொன்றதாக மகன் கைது

தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சான்(65).இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது வீட்டில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:33 PM
பகிர்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சான்(65).இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மதியம் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.முன் விரோதம் காரணமாக குஞ்சான் மகன் சேகர்(40) என்பவர்தான் அடித்துக் கொன்றதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது.இது குறித்து வெள்ளரியம்மாள் கொடுத்த புகாரின் பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குஞ்சான் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments