முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

திருப்பாச்சேத்தி அருகே வைகை மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை இவரது மகன் சந்திரன்(50) ,விவசாயியான இவர் வயல்காட்டில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அங்குள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:35 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

திருப்பாச்சேத்தி அருகே வைகை மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை இவரது மகன் சந்திரன்(50) ,விவசாயியான இவர் வயல்காட்டில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அங்குள்ள மின்மோட்டாரை இயங்கச் செய்ய சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது அதில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் சந்திரனை தாக்கியது.

ச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். மானாமதுரை அரசு மருத்துவமனையில் சந்திரன் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பாச்சேத்தி போலீசார் இச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.