கொலை மிரட்டல்: அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
பண்ருட்டி, திருவதிகையில் அதிமுகவை சேர்ந்த இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை விநாயகர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட வீடு திரும்பிய
இளைஞரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பண்ருட்டி, திருவதிகையில் அதிமுகவை சேர்ந்த இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை விநாயகர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட வீடு திரும்பிய குருமூர்த்தி மகன் முத்துக்குமரனை(19), எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில், ஹரி, கோகுல், கோவிந்தன் உள்ளிட்ட 3 பேர் மீது பண்ருட்டி போலீஸôர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.