முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்துள்ள சிதம்பரம் இளம் விஞ்ஞானிக்கு எம்எல்ஏ பாராட்டு

கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டியில் ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்து வெற்றி பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:50 AM
பகிர்:

கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி போட்டியில் ஒலிகளை பற்கள் மூலம் கேட்கலாம் என நிருபித்து வெற்றி பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட சிதம்பரம் மாணவருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தார்

சிதம்பரம் சி.கொத்தங்குடித்தோப்பைச் சேர்ந்த ரவி, கற்பகம் தம்பதியரின் மகன் திவ்ய கமலேஷ்(13). இவர் சிதம்பரம் காமராஜ் சிறப்பு மெட்ரிக்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இம்மாணவர் கடந்த செப்.7 ந்தேதி கடலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி போட்டியில் பங்கேற்று ஒலிகளை காதுகளால் மட்டும் கேட்காமல், பற்கள் மூலம் கேட்க முடியம் என்பதை நிருபித்துள்ளார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக மாவட்டத்தின் முதல் விருதான மண்டல பாலஸ்ரீ விருதை அம்மாணவர் பெற்றுள்ளார். மேலும் இம்மாணவர் புதுதில்லியில் நடைபெறவுள்ள அகில இந்திய இளம் அறிவியல் விஞ்ஞானி போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாணவர் திவ்ய கமலேஷ் வீட்டிற்கு இன்று சென்று சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். எம்எல்ஏவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்க கூட்டு நடவடிக்கை குழு இனைச்செயலாளர் சி.மதியழகன், ஊழியர் சங்க நிர்வாகிகள் கபில்தேவ், அசோகன், விஜயராணி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →