ரேஷன் கடைகளில் உருளைக்கிழங்கு விற்பனை: கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் தகவல்
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் பா.மில்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சந்தையில் விலை உயர்ந்து காணப்படும் பொருள்களை இனம் கண்டு அதன் தாக்கம் பொதுமக்களை சென்று சேராமல் இருக்கும் பொருட்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. நமேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறைந்த விலையில் ரவா, மைதா, போன்ற பொருள்கள் வியாழக்கிழமை (செப்.12) முதல் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடைகள் மூலமாக சிதம்பரம் நகரில் விற்பனை செய்யப்படுகிறது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 425 நியாயவிலைக் கடைகளில் படிப்படியாக தேவைப் பட்டியல் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது என பா.மில்லர் தெரிவித்துள்ளார்.