முகப்பு
தற்போதைய செய்திகள்

கார், வேன் மோதல்: டிரைவர் சாவு, மூவர் படுகாயம்

சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று மாலை கார், வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் இறந்தார். காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:41 PM
பகிர்:

சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று மாலை கார், வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் இறந்தார். காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்யாறு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (45). இவர் தனது மனைவி ராஜேஸ்வரி (41), மகள் ஸ்ரீலேகா (16) ஆகியோர் காரில் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு திங்கள்கிழமை காலை சென்றுவிட்டு மாலை ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சி.முட்லூர் எனுமிடத்தில் எதிரே கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இவ்விபத்தில் செய்யாறைச் சேர்ந்த கார் டிரைவர் விநாயகம் (45) விபத்தில் காரில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று காரின் கதவை உடைத்து டிரைவர் விநாயகம் மற்றும் படுகாயமுற்ற ரங்கநாதன், ராஜேஸ்வரி, ஸ்ரீலேகா ஆகியோரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார் டிரைவர் விநாயகம் இறந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →