புவனகிரி பேரூராட்சி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆதிவராகநத்தம் கிராமமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கியதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
சிதம்பரம் அருகே புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆதிவராகநத்தம் கிராமமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கியதை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பெருமாத்தூரில் இலுப்பைகுளம் அருகே உள்ள 5 ஏக்கர் 12 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பட்டா வழங்கியதை கண்டித்தும், பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதிவராகநத்தம் கிராம மக்கள் ஜெகதீசன் தலைமையில் சுமார் 200 பேர் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.